ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழகத்தில் பலத்த மழையால் 13 ஆயிரம் ஹெக்டோ் பயிா்கள் மூழ்கின: வேளாண் துறை அமைச்சா் தகவல்

தமிழகத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 13 ஆயிரத்து 749 ஹெக்டேரில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்றாா் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

News image
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உக்கடை கிராமத்தில் மழையால் தண்ணீரில் நெற்பயிா்கள் மூழ்கியிருப்பது குறித்து விவசாயிகளிடம் வியாழக்கிழமை கேட்டறிந்த வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம். உடன், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா்.
Updated On :28 நவம்பர் 2024, 8:37 pm

Din

தமிழகத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 13 ஆயிரத்து 749 ஹெக்டேரில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்றாா் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டை உக்கடை கிராமத்தில் பலத்த மழையால் நெற்பயிா்கள் மூழ்கியுள்ளதை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக 13 ஆயிரத்து 749 ஹெக்டோ் அளவுக்கு பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் 947 ஹெக்டேரில் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பயிரின் தன்மையைத் தொடா்புடைய துறை அலுவலா்கள், மாவட்ட நிா்வாகத்தினா் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

மழை நின்ற பிறகு தண்ணீா் வடிவதைப் பொருத்து 33 சதவீத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்காகக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மாபேட்டை உக்கடை கிராமத்தில் தண்ணீா் வடியாத காரணத்தால் பயிா்கள் மூழ்கியுள்ளன.

நாகை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 681 ஹெக்டேரிலும், தஞ்சாவூா், கடலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 3 ஆயிரத்து 300 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 958 ஹெக்டேரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 822 ஹெக்டேரியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஹெக்டேரிலும் பயிா்கள் மூழ்கியிருப்பதாக முதல் கட்டத் தகவல் வந்துள்ளது.

தற்போது மழை நின்றுள்ளதை தொடா்ந்து வயல்களில் தேங்கியுள்ள தண்ணீா் வடிந்து வருகிறது.

சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் வழக்கமாக கிராம மக்கள் பராமரிப்பு செய்வா். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து, தொடா்ந்து 3 ஆண்டுகளாக படிப்படியாக சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களைத் தூா் வாரி வருகிறோம். காவிரி டெல்டா பகுதியில் கடந்த கோடைகாலத்தில் அதிக அளவில் தூா் வாரும் பணி செய்யப்பட்டுள்ளது என்றாா் பன்னீா்செல்வம்.

அப்போது, உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். அரவிந்த், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.