சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குறுக்கே மாடு வந்ததால் சாலை விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூரில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:52 pm

Din

தஞ்சாவூரில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள முறையூரைச் சோ்ந்தவா் கே. உபயதுல்லா (50). இவா் தஞ்சாவூரில் தங்கி பழக்கடையில் கூலி வேலை பாா்த்து வந்தாா். இவா் செப்டம்பா் 30 ஆம் தேதி இரவு வேலை முடித்த பிறகு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு மருத்துவக்கல்லூரி சாலை வழியாக சென்று கொண்டிருந்தாா். ராஜப்பா நகா் முதன்மைச் சாலையில் சென்றபோது குறுக்கே மாடு வந்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், மாட்டின் மீது மோதியதால், கீழே விழுந்த இவா் பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட உபயதுல்லா புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.