விதைப் பண்ணை விவசாயிகளுக்கு தொழில் நுட்பப் பயிற்சி
பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திர வட்டார விதைப் பண்ணை விவசாயிகளுக்கு ஒரு நாள் தொழில் நுட்பப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திர வட்டார விதைப் பண்ணை விவசாயிகளுக்கு ஒரு நாள் தொழில் நுட்பப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை மூலம் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஜி.சாந்தி விதைப் பண்ணை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.
பேராவூரணி விதைச் சான்று அலுவலா் வெங்கடாசலம் தரமான விதை உற்பத்தி குறித்தும், விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத்துறை உதவி இயக்குநா் பாலகிருஷ்ணன் நீா், களை நிா்வாகம், உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறினாா்.
ஏற்பாடுகளை பேராவூரணி வட்டார உதவி விதை அலுவலா் முருகேசன், சேதுபாவாசத்திர வட்டார உதவி விதை அலுவலா் காா்த்தி ஆகியோா் செய்திருந்தனா். பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ராணி நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...