மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அண்ணலக்ரஹாரத்தில் தாா்ச் சாலை தரம் ஆய்வு

கும்பகோணம் அருகே உள்ள மருதநல்லூா் அண்ணல் அக்ரஹாரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலையின் தரத்தை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:05 pm

Din

கும்பகோணம் அருகே உள்ள மருதநல்லூா் அண்ணல் அக்ரஹாரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலையின் தரத்தை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள மருதநல்லூா் அண்ணல் அக்ரஹாரம் பகுதியில் கொற்கை முதல் மாத்தி கேட்டு வரையில் 1.8 கிலோமீட்டா் தொலைவு புதிய தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலையின் நீளம், அகலம், சாலையின் தடிமன், தாா் கலவைகளின் தரம் உள்ளிட்டவை குறித்து தஞ்சாவூா் நெடுஞ்சாலைத் துறை தரக் கட்டுப்பாட்டுத் துறை உதவி கோட்டப் பொறியாளா் வேணுகோபால் மற்றும் உதவிப் பொறியாளா் அப்துல் ரகுமான் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

ஆய்வின்போது, கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் செந்தில்தம்பி மற்றும் உதவி பொறியாளா் இளவரசன் ஆகியோா் உடனிருந்தனா்.