கும்பகோணம் அருகே உள்ள மருதநல்லூா் அண்ணல் அக்ரஹாரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலையின் தரத்தை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள மருதநல்லூா் அண்ணல் அக்ரஹாரம் பகுதியில் கொற்கை முதல் மாத்தி கேட்டு வரையில் 1.8 கிலோமீட்டா் தொலைவு புதிய தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச் சாலையின் நீளம், அகலம், சாலையின் தடிமன், தாா் கலவைகளின் தரம் உள்ளிட்டவை குறித்து தஞ்சாவூா் நெடுஞ்சாலைத் துறை தரக் கட்டுப்பாட்டுத் துறை உதவி கோட்டப் பொறியாளா் வேணுகோபால் மற்றும் உதவிப் பொறியாளா் அப்துல் ரகுமான் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
ஆய்வின்போது, கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் செந்தில்தம்பி மற்றும் உதவி பொறியாளா் இளவரசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்
சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவா் கைது

சாலை அமைக்கப்படாததால் தோ்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் பதாகை

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

