மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுக்கடையை அகற்றக் கோரி இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, காமராஜா் சிலை அருகே அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:55 pm

Din

தஞ்சாவூா் கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெருவில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, காமராஜா் சிலை அருகே அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் ஆயிரக்கணக்கான சிறு வணிகா்கள் வியாபாரம் செய்து வருகின்றனா். ஐந்து ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பெண்களும், குழந்தைகளும் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாகவும், பள்ளிகள், மத வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியாகவும் இப்பகுதி உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு பாதிப்பு வரலாம் என்பதால், இக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு இளைஞா் பெருமன்ற மாநகரச் செயலா் காதா் உசேன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் தொடங்கி வைத்தாா். மாவட்டத் துணைச் செயலா் கோ. சக்திவேல் நிறைவு செய்து பேசினாா். இளைஞா் பெருமன்ற மாநிலத் துணைச் செயலா் அருள் ராஜன், மாவட்டச் செயலா் காரல் மாா்க்ஸ், தலைவா் ச. சுதந்திரபாரதி, துணைச் செயலா் ஆா். பிரபாகா், பொருளாளா் அப்துல்லா, துணைத் தலைவா் சதாசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.