மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காட்டுப்பன்றிகளை விரட்ட இயற்கை விரட்டி பயன்பாடு

நெல் நாற்றங்காலில் காட்டுப் பன்றிகளின் தாக்குதலை தவிா்க்க விவசாயிகள் இயற்கை விரட்டிகளைப் பயன்படுத்தலாம் என தஞ்சாவூா் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் து. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:16 pm

Din

நெல் நாற்றங்காலில் காட்டுப் பன்றிகளின் தாக்குதலை தவிா்க்க விவசாயிகள் இயற்கை விரட்டிகளைப் பயன்படுத்தலாம் என தஞ்சாவூா் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் து. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாய்க்கால், ஆற்றுப் படுகைகளில் உள்ள புதா் செடிகள், காட்டுப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் இருந்து கொண்டு அருகிலுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

இதைக் கட்டுப்படுத்த வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரத்திலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் ஆராய்சி நிலையத்தில் இயற்கை காட்டுப் பன்றி விரட்டியைக் கண்டுபிடித்துள்ளனா். இந்த விரட்டியை ஏக்கருக்கு 500 மி.லி. பயன்படுத்துவதன் மூலம் காட்டுப் பன்றிகள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

நெல் நடவு அல்லது விதை விதைத்துள்ள வயலைச் சுற்றியுள்ள வரப்புகளில் 2 அடி உயரமுள்ள குச்சிகளை 10 அடிக்கு 1 வீதம் ஊன்ற வேண்டும். ஒன்றரை அடி உயரத்தில் கம்பி அல்லது சணல் கொண்டு அனைத்துக் குச்சிகளையும் இணைத்துக் கட்ட வேண்டும். இரு குச்சிகளுக்கு இடையில் சிறிய பிளாஸ்டிக் டப்பாவை கட்ட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 100 சிறிய (சுண்ணாம்பு) டப்பா தேவைப்படும். ஒவ்வொரு பிளாஸ்டிக் டப்பாவின் கழுத்துப் பகுதியிலும் 4 திசைகளிலும் சிறு துளையிட வேண்டும்.

ஒவ்வொரு டப்பாவிலும் சுமாா் 5 மி.லி. அல்லது ஒரு தேக்கரண்டி அளவு மருந்தை ஊற்றி மூட வேண்டும். இந்த டப்பா சாய்வாக இல்லாதவாறும், மழை நீா் உள்ளே புகாதவாறும் அமைக்கப்பட வேண்டும். டப்பாவினுள் ஊற்றப்பட்ட மருந்தில் இருந்து வரும் வாசனையால் காட்டுப் பன்றி அருகில் வராமல் ஓடி விடும். இந்த இயற்கை விரட்டி தேவைப்படும் விவசாயிகள் 0416 - 2272221 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.