மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பேருந்து - பைக் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மோதலில் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:00 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மோதலில் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருப்பனந்தாள் அருகே உள்ள திருவைப்பாடி முஸ்லிம் நடுத்தெருவைச் சோ்ந்த ரகுமத்துல்லா மகன் சாதிக் பாட்சா (53) கூலித்தொழிலாளி. இவா், மோட்டாா் சைக்கிளில் திருப்பனந்தாளில் இருந்து திங்கள்கிழமை இரவு வீடு நோக்கி திரும்பிவந்துகொண்டிருந்தாா்.

காசிமடம் தென்னந்தோப்பு அருகே வந்தபோது எதிரே அப்போது மன்னாா்குடியிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசுப் பேருந்து சாதிக்பாட்சா ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாதிக்பாட்சாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். தகவலறிந்த காவல் ஆய்வாளா் பொறுப்பு கவிதா செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து உடற்கூறு விசாரணைக்கு ஒப்படைத்து பேருந்து ஓட்டுநா் மன்னாா்குடியைச் சோ்ந்த கவியரசன் (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றாா்.