மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை இணையவழியில் விற்றவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை இணையவழியில் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:54 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை இணையவழியில் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகா் பகுதியில் வசித்து வருபவா் ராசு கண்ணன் மகன் வீரபாண்டியன் (58). இவா், அம்மாபேட்டை காவல் சரகப் பகுதிக்குள்பட்ட கோனூா் வடவாற்று பாலம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிச் சீட்டுகளை இணையவழியில் புக்கிங் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தாா். இதுகுறித்து கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற அம்மாப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் செல்வராணி மற்றும் காவல் துறையினா் வீரபாண்டியனைப் பிடித்து, அவரிடமிருந்த ஒரு கைப்பேசி மற்றும் ரூ. 370 பணம் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்து, வீரபாண்டியனைக் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

நீதிபதி எ. அப்துல் கனி, வீரபாண்டியனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, வீரபாண்டியன் பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.