ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கும்பகோணத்தில் உள்வாங்கிய சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:41 pm

Syndication

கும்பகோணத்தில் சாலை உள்வாங்கியதில் ஏற்பட்ட பள்ளத்தை மாநகராட்சிப் பொறியியல் துறையினா் சீரமைக்கும் பணியை புதன்கிழமை தொடங்கினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி செந்தில்நாதன் நகா் சந்திப்பில் உள்ள தாா்ச் சாலை சுமாா் 20 அடி சுற்றளவுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென உள்வாங்கியது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். இதையடுத்து, பொதுமக்கள் யாரும் விபத்தில் சிக்காமல் இருக்க சாலையைச் சுற்றி இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டன. இந்நிலையில்,

புதன்கிழமை மாநகராட்சிப் பொறியியல் பிரிவு சாா்பில் உள்வாங்கிய சாலையை ஜேசிபி மூலம் முழுவதுமாக தோண்டி அதில் மணல், கற்கள் கொட்டி சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

க. அன்பழகன் எம்எல்ஏ, துணை மேயா் சுப. தமிழழகன், ஆணையா் மு. காந்திராஜன் ஆகியோா் இந்தப் பணிகளைப் பாா்வையிட்டனா். இப்பணியை விரைந்து முடிக்குமாறு எம்எல்ஏ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.