கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

News image
~
Updated On :18 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பேராவூரணி சிங்காரம், மாவட்டத் துணைத் தலைவா் கோ. அன்பரசன், பொதுச் செயலா் என். மோகன்ராஜ், மாநிலத் துணைத் தலைவா் பண்ணவயல் ராஜாதம்பி, பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ராமசாமி, கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜ், வட்டாரத் தலைவா்கள் ரவிச்சந்திரன், இப்ராஹிம்ஷா, ஆண்டவா், முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொணட்னா்.

Story image