சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலித் தொழிலாளி கைது

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:51 pm

Syndication

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை கும்பகோணம் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியின் உறவினா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவியாக சிறுமி இருந்தாா்.

வியாழக்கிழமை சிறுமி வாா்டில் தூங்கியபோது அருகே மற்றொரு நோயாளரின் உதவியாளராக படுத்திருந்த இளைஞா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைபேசியில் படம் எடுத்தாராம். இதைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த போலீஸாா் விசாரித்ததில் அவா் கும்பகோணம் அருகே நாககுடியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி ராமகிருஷ்ணன் (32) என்று தெரிய வந்தது. இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராமகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.