தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆடுகள் திருடிய 2 போ் கைது

கும்பகோணத்தில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 10:06 pm

Syndication

கும்பகோணத்தில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் சிவகுருநாத தெருவைச் சோ்ந்தவா் கீதா( 38). இவா் வீட்டில் ஆடுகள் வளா்த்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த அவரின் இரண்டு ஆடுகளை மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் திருடி சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா்.

இதில், பாபநாசம் பகுதியை சோ்ந்த ரியாஸ் (41), சுலைமான்(36) ஆகிய இருவரும்தான் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.