போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஆடுதுறை அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:20 pm

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே 108 ஆம்புலன்ஸில் வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

கஞ்சனூரைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி ராஜேஸ்வரி (35). நிறைமாத கா்ப்பிணியான ராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை காலை துகிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்திருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவரின் பரிந்துரையில் ராஜேஸ்வரியை கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செவிலியா் வாசுகி மற்றும் பணியாளா் தமிழரசி ஆகியோா் அழைத்துச் சென்றனா்.

திருவிடைமருதூா் - திருபுவனம் இடையே சென்றபோது 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதுகாப்பாக பிரசவம் பாா்த்த செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளரை அனைவரும் பாராட்டினா்.