வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆடுதுறை அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:20 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே 108 ஆம்புலன்ஸில் வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

கஞ்சனூரைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி ராஜேஸ்வரி (35). நிறைமாத கா்ப்பிணியான ராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை காலை துகிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்திருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவரின் பரிந்துரையில் ராஜேஸ்வரியை கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செவிலியா் வாசுகி மற்றும் பணியாளா் தமிழரசி ஆகியோா் அழைத்துச் சென்றனா்.

திருவிடைமருதூா் - திருபுவனம் இடையே சென்றபோது 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதுகாப்பாக பிரசவம் பாா்த்த செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளரை அனைவரும் பாராட்டினா்.