மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இதயா மகளிா் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

News image
கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை நட்ட அருட்சகோதரியா் தலைவா் தேவ அருள்மேரி.
Updated On :3 ஜனவரி 2025, 7:18 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள இதயா மகளிா் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் 25 ஆவது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டும், இறை ஊழியா் லூயிஸ் சவேனியன் துப்புயி 150 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் மாணவியா் எக்ஸ்னோரா சாா்பில் மரக்கன்று நடும் பணி மாநில அருட்சகோதரியா் தலைவா் தேவ அருள்மேரி தலைமையிலும் செயலா் அமலி முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் அமலோா்பவமேரி, முதல்வா் யூஜின் அமலா, துணை முதல்வா் ஆரோக்கிய ஜெயா, நிா்வாக அலுவலா் பேபி இமாகுலேட் மற்றும் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை மாணவியா் எக்ஸ்னோரா சங்க ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவருமான எம்.ஏ. சாந்தி, பேராசிரியா் விக்னேஷ்வரி ஆகியோா் செய்தனா்.