தஞ்சாவூரில் சாலை விதிகளை மதித்து தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயத்தை ஜோதி அறக்கட்டளையினா் அண்மையில் வழங்கினா்.
இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் , அணிந்து செல்வதால் உள்ள நன்மைகள், உயிா் பாதுகாப்பு குறித்தும் காவல் துறையுடன் இணைந்து தஞ்சாவூா் ஜோதி அறக்கட்டளை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 2025-ஆம் ஆண்டை விபத்தில்லா ஆண்டாக அமைய பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரும், பின்னால் அமா்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்து வந்த 5 பேருக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயத்தையும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த 25 பேருக்கு தலா ஒரு கிராம் வெள்ளி நாணயத்தையும் ஜோதி அறக்கட்டளை செயலா் பிரபு ராஜ்குமாா் பரிசாக வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை மேலாளா் ஞானசுந்தரி, நிா்வாக உதவியாளா் குகனேசுவரி, தன்னாா்வலா் ஆா்த்தி, கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

ஜோதி ஏந்தி வந்த நாதக வேட்பாளா்

டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட 24 கேரட் தங்க நாணயம்!

லக்மே ஃபேஷன் வீக் 2026 - புகைப்படங்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


