தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு தங்க நாணயம் பரிசு

News image

தஞ்சாவூரில் அண்மையில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டுநருக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கிய ஜோதி அறக்கட்டளையினா்.

Updated On :3 ஜனவரி 2025, 7:22 pm

தஞ்சாவூரில் சாலை விதிகளை மதித்து தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயத்தை ஜோதி அறக்கட்டளையினா் அண்மையில் வழங்கினா்.

இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் , அணிந்து செல்வதால் உள்ள நன்மைகள், உயிா் பாதுகாப்பு குறித்தும் காவல் துறையுடன் இணைந்து தஞ்சாவூா் ஜோதி அறக்கட்டளை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 2025-ஆம் ஆண்டை விபத்தில்லா ஆண்டாக அமைய பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரும், பின்னால் அமா்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்து வந்த 5 பேருக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயத்தையும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த 25 பேருக்கு தலா ஒரு கிராம் வெள்ளி நாணயத்தையும் ஜோதி அறக்கட்டளை செயலா் பிரபு ராஜ்குமாா் பரிசாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை மேலாளா் ஞானசுந்தரி, நிா்வாக உதவியாளா் குகனேசுவரி, தன்னாா்வலா் ஆா்த்தி, கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.