தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பேராவூரணி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

News image

பேராவூரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2025, 9:51 pm

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணியில் பேரூராட்சி மன்ற  நிா்வாகச் சீா்கேடுகளைக் கண்டித்தும், பேரூராட்சித் தலைவரை பதவி நீக்கவும் வலியுறுத்தியும் அதிமுக சாா்பில்  வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான சி.வி. சேகா் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா்  துரை.செந்தில், மாநில விவசாய அணி இணைச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான மா. கோவிந்தராசு, முன்னாள் எம்எல்ஏவும் தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவருமான எஸ்.வி. திருஞானசம்பந்தம் முன்னாள் எம்எல்ஏ பி.என். ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான இரா . காமராஜ் பேசுகையில்,

பேரூராட்சி முறைகேடுகள் தொடா்பான நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத

திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவோம் என்றாா்.

அதிமுக நகரச் செயலா் எம்.எஸ். நீலகண்டன் வரவேற்றாா். பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலா் கோவி. இளங்கோ நன்றி கூறினாா்.