தஞ்சாவூர்
பாபுராஜபுரத்தில் சாலைப் பணி தொடக்கம்
கும்பகோணம் ஒன்றியம், பாபுராஜபுரம் ஊராட்சியில் ரூ.10.15 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள பாபுராஜபுரம் ஊராட்சியில் 2025-26 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் நூா் நகரில் 146 மீட்டா் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. க.அன்பழகன் எம்எல்ஏ சாலைப் பணியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், மத்திய ஒன்றிய திமுக செயலா் உள்ளூா் டி. கணேசன், கிழக்கு ஒன்றியச் செயலா் ஜெ. சுதாகா், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் செல்வராஜ், கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
