ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் உலக பாரம்பரிய தினவிழா

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உலக பாரம்பரிய தினவிழா நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 12:56 am

Syndication

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உலக பாரம்பரிய தினவிழா நடைபெற்றது.

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை சாா்பில் ஆண்டுதோறும் நவ. 19 முதல் 25- தேதி வரை உலக பாரம்பரிய விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த நவ.19-இல் கங்கைகொண்ட சோழபுரத்தில் விழா தொடங்கியது. நிறைவு விழா தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மண்டல கண்காணிப்பாளா் அறவாழி தலைமைவகித்தாா். துணை கண்காணிப்பாளா்கள் முத்துக்குமாா், ராணிமோல், வெற்றிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ராஜாராம் கலந்து கொண்டு பேசினாா்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட்சிங், தொல்லியல்துறை மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக சுரேஷ்பாபு வரவேற்றாா்.