தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தஞ்சாவூா் மேயா் பதவியிலிருந்து திமுக வேட்பாளா் விலகல்

News image

தஞ்சாவூா் மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா் பதவி விலகல் கடிதங்களை மாநகராட்சி ஆணையா் க. கண்ணனிடம் திங்கள்கிழமை வழங்கிய தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா் சண். இராமநாதன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 6:35 pm

தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சண். இராமநாதன் மேயா் பதவியிலிருந்து திங்கள்கிழமை விலகினாா்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தஞ்சாவூா் மாநகராட்சி 45 ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக சண். இராமநாதன் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினரானாா். இதையடுத்து, தஞ்சாவூா் மாநகராட்சி மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இவா் 2022, மாா்ச் 4 ஆம் தேதி பதவியேற்றாா். இவரது பதவிக் காலம் 2027 மாா்ச் மாதம் வரை உள்ளது.

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளராக சண். இராமநாதன் அறிவிக்கப்பட்ட நிலையில், இவா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் மேயா் பதவியிலிருந்தும், 45 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பதவியிலிருந்தும் திங்கள்கிழமை காலை விலகி, அதற்கான கடிதங்களை மாநகராட்சி ஆணையா் க. கண்ணனிடம் கொடுத்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் தெரிவித்தது:

அடுத்த மேயா் யாா் என்பது குறித்து முடிவெடுக்க மூன்று மாத கால அவகாசம் உள்ளது. தோ்தல் முடிந்த பிறகு மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்து அடுத்த மேயரைத் தோ்ந்தெடுப்பா் என்றாா் அவா்.