தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

கும்பகோணத்தில் திமுகவை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம், நாதக மறியல்

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை திமுகவை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

~

Updated On :15 ஏப்ரல் 2026, 1:13 am IST

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை திமுகவை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் துக்காம்பாளையத்தெருவில் செவ்வாய்க்கிழமை திமுகவினா் ரூ.8 ஆயிரத்துக்கான மாதிரி கூப்பனை வீடுவீடாக கொடுத்து வாக்கு சேகரித்தனா். அப்போது அங்கு வாக்கு சேகரிக்க வந்த தவெக வேட்பாளா் ர. வினோத் உள்ளிட்டோா் கூப்பன் கொடுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பிறகு கைகலப்பாக மாறியது.

இதையடுத்து தவெகவினா் காந்திபூங்கா அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அங்கிருந்து ஊா்வலமாக கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளித்தனா். இதேபோல மாநகர திமுக சாா்பில் தவெக குறித்து புகாா் அளித்தனா்.

இந்நிலையில் காந்தியடிகள் சாலையில் திமுகவினா் வாக்கு சேகரித்து கூப்பன்களை கொடுத்துக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த நாதக வேட்பாளா் மோ.ஆனந்த் திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பிறகு காந்தியடிகள் சாலையில் நாம் தமிழா் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா். அப்பகுதியிலிருந்து திமுகவினா் சென்ற பிறகு நாதகவினா் கலைந்து சென்றனா்.

Story image