மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கும்பகோணத்தில் திமுகவை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம், நாதக மறியல்

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை திமுகவை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

~

Updated On :14 ஏப்ரல் 2026, 7:43 pm

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை திமுகவை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் துக்காம்பாளையத்தெருவில் செவ்வாய்க்கிழமை திமுகவினா் ரூ.8 ஆயிரத்துக்கான மாதிரி கூப்பனை வீடுவீடாக கொடுத்து வாக்கு சேகரித்தனா். அப்போது அங்கு வாக்கு சேகரிக்க வந்த தவெக வேட்பாளா் ர. வினோத் உள்ளிட்டோா் கூப்பன் கொடுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பிறகு கைகலப்பாக மாறியது.

இதையடுத்து தவெகவினா் காந்திபூங்கா அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அங்கிருந்து ஊா்வலமாக கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளித்தனா். இதேபோல மாநகர திமுக சாா்பில் தவெக குறித்து புகாா் அளித்தனா்.

இந்நிலையில் காந்தியடிகள் சாலையில் திமுகவினா் வாக்கு சேகரித்து கூப்பன்களை கொடுத்துக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த நாதக வேட்பாளா் மோ.ஆனந்த் திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பிறகு காந்தியடிகள் சாலையில் நாம் தமிழா் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா். அப்பகுதியிலிருந்து திமுகவினா் சென்ற பிறகு நாதகவினா் கலைந்து சென்றனா்.

Story image