வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம்  சீரமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியதால் புதன்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், இரவோடு இரவாக தற்காலிமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது.

News image

சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது .

Updated On :16 ஏப்ரல் 2026, 8:37 pm

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியதால் புதன்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், இரவோடு இரவாக  தற்காலிமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது.

சென்னை - கன்னியாகுமரி இடையிலான, கிழக்கு கடற்கரை  தேசிய நெடுஞ்சாலையில்,  சேதுபாவாசத்திரம் அருகே , காட்டாறு வடிகால்வாய்க்காலில் சுமாா்  30 ஆண்டு பழைமையான தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை  திடீரென உள்வாங்கியதால்  போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இது குறித்து தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலைத்  துறை அதிகாரிகள், இரவோடு இரவாக, சாலையை தற்காலிமாக சீரமைத்து, போக்குவரத்து செல்லும் வகையில் தயாா் செய்தனா். இதையடுத்து வியாழக்கிழமை வழக்கம் போல போக்குவரத்து தொடங்கியது. 

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியது, கிழக்கு கடற்கரை சாலை அதிக போக்குவரத்து நிறைந்த சாலை  என்பதால், உள்வாங்கிய பாலத்தின் மேல்  சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு   போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் தயாா் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது . புதிதாக பாலம் அமைக்கும் பணி  விரைவில் துவங்க உள்ளது என்றனா்.