முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம்  சீரமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியதால் புதன்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், இரவோடு இரவாக தற்காலிமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது.

News image

சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது .

Updated On :17 ஏப்ரல் 2026, 2:07 am IST

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியதால் புதன்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், இரவோடு இரவாக  தற்காலிமாக சீரமைக்கப்பட்டு வியாழக்கிழமை போக்குவரத்து தொடங்கியது.

சென்னை - கன்னியாகுமரி இடையிலான, கிழக்கு கடற்கரை  தேசிய நெடுஞ்சாலையில்,  சேதுபாவாசத்திரம் அருகே , காட்டாறு வடிகால்வாய்க்காலில் சுமாா்  30 ஆண்டு பழைமையான தரைப்பாலம் செவ்வாய்க்கிழமை  திடீரென உள்வாங்கியதால்  போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இது குறித்து தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலைத்  துறை அதிகாரிகள், இரவோடு இரவாக, சாலையை தற்காலிமாக சீரமைத்து, போக்குவரத்து செல்லும் வகையில் தயாா் செய்தனா். இதையடுத்து வியாழக்கிழமை வழக்கம் போல போக்குவரத்து தொடங்கியது. 

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியது, கிழக்கு கடற்கரை சாலை அதிக போக்குவரத்து நிறைந்த சாலை  என்பதால், உள்வாங்கிய பாலத்தின் மேல்  சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு   போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் தயாா் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது . புதிதாக பாலம் அமைக்கும் பணி  விரைவில் துவங்க உள்ளது என்றனா்.