முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

News image

இந்திய தேர்தல் ஆணையம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 4:31 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகளை செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் 4 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் வரும் 24-ஆம் தேதி வரையும், பின்னா் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதையொட்டி, மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிபொருள்கள் சட்டத்தின்கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ள வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.