தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

News image

இந்திய தேர்தல் ஆணையம்.

Updated On :20 ஏப்ரல் 2026, 11:01 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகளை செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் 4 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் வரும் 24-ஆம் தேதி வரையும், பின்னா் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதையொட்டி, மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிபொருள்கள் சட்டத்தின்கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ள வெடிபொருள் விற்பனை நிலையங்கள், கிடங்குகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.