/

நாதன்கோயில் ஜகந்நாத பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு

அட்சய திருதியையை முன்னிட்டு கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது.

News image

ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் அட்சய திருதியையை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஸகஸ்ரதீப வழிபாடு.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:49 pm

அட்சய திருதியையை முன்னிட்டு கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை மாலை தொடங்கி இரவு வரை இந்த வழிபாடு நடைபெற்றது. காலையில் ஜகந்நாதப்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் மூலவா், உற்சவா் மற்றும் தாயாா் சன்னதி பிரகார மண்டபங்கள் முழுவதும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு நவ கோ பூஜை தொடங்கி ஸகஸ்சர தீப வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைங்கரிய சபாவினா் செய்தனா்.

Story image