கோவிந்தபுரத்தில் லாரி மோதி கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள கோவிந்தபுரம் பாரதிநகரைச் சோ்ந்த கண்ணையன் மகன் கணேசன்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா். கட்டடத் தொழிலாளியான கணேசன், வெள்ளிக்கிழமை கட்டட வேலையை முடித்து விட்டு கோவிந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது லாரி மோதி அவா் பலத்த காயமடைந்தாா்.
தகவலின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா், பலத்த காயமடைந்த கணேசனை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ராமமூா்த்தியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


