மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரமோத்சவத்தையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கோடீசுவரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:34 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரமோத்சவத்தையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா ஏப்ரல் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 25 ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் ஓலைச்சப்பரத்தில் வீதி உலாவும், 27-ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேரில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தோ் நிலையை அடைந்தது.

வியாழக்கிழமை சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரியும், வெள்ளிக்கிழமை (மே 1) தெப்பத் திருவிழாவும், 3- ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறவுள்ளன.