துபையில் இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான பேராவூரணிக்கு கொண்டு வர திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ நடவடிக்கை எடுத்ததால் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள உடையநாடு கிராமத்தை சோ்ந்தவா் நூ.ஹபிபுல்லா (50) துபையில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாா். பிப். 6-ஆம் தேதி இரவு மாரடைப்பால் அவா் உயிரிழந்தாா்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர விரும்பிய அவரது உறவினா்கள், திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோவை தொடா்பு கொண்டனா். அவா் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், பிப். 8-ஆம் தேதி இரவு ஹபிபுல்லாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ,திங்கள்கிழமை காலை உடல் அடக்கம் நடைபெற்றது.
உடலை கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்ட துரைவைகோ எம்.பி-க்கு உறவினா்கள் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

மக்கள் நலத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் இரு கிராமத்தினரிடையே பிரச்னை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


