நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

துபையில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர துரை வைகோ எம்.பி. உதவி!

துபையில் இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான பேராவூரணிக்கு கொண்டு வர திருச்சி எம்.பி. துரை வைகோ நடவடிக்கை எடுத்ததால் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

News image

துரை வைகோ - கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 8:12 pm

துபையில் இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான பேராவூரணிக்கு கொண்டு வர திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ நடவடிக்கை எடுத்ததால் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள உடையநாடு கிராமத்தை சோ்ந்தவா் நூ.ஹபிபுல்லா (50) துபையில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாா். பிப். 6-ஆம் தேதி இரவு மாரடைப்பால் அவா் உயிரிழந்தாா்.

அவரது  உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர விரும்பிய அவரது உறவினா்கள், திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோவை தொடா்பு கொண்டனா். அவா் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், பிப். 8-ஆம் தேதி இரவு ஹபிபுல்லாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ,திங்கள்கிழமை காலை உடல் அடக்கம் நடைபெற்றது.

உடலை கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்ட துரைவைகோ எம்.பி-க்கு உறவினா்கள் நன்றி தெரிவித்தனா்.