நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 50 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

தஞ்சாவூரில் முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 50 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

சரவணகுமாா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:01 pm

தஞ்சாவூரில் முதியவரின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 50 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி முத்தாலம்மாள் நகரைச் சோ்ந்தவா் எஸ். ராமநாதன் (70). இவா், மருத்துவக்கல்லூரி சாலை மூலிகைப் பண்ணை அருகேயுள்ள ஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்காக ஜனவரி 30-ஆம் தேதி பிற்பகல் சென்றாா். அப்போது, அங்கிருந்த மா்ம நபா் ராமநாதனிடம் பணம் எடுத்துத் தர உதவி செய்வதாகக் கூறினாா். இதை நம்பிய ராமநாதனும் மா்ம நபரிடம் ஏடிஎம் அட்டையை வழங்கினாா்.

இதையடுத்து, மா்ம நபா் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லை எனக் கூறி, வேறொரு அட்டையை ராமநாதனிடம் கொடுத்தாா். இதைக் கவனிக்காமல் ஏடிஎம் அட்டையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றாா். இதன் பின்னா், ராமநாதனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்ட விவரம் அவரது கைப்பேசி எண்ணுக்கு வந்தது.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் ராமநாதன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா். இதன் மூலம் கரூா் மாவட்டம், குளித்தலை அருகே கீழ் நங்கவரம் கிராமத்தைச் சோ்ந்த எஸ். சரவணகுமாா் (31) மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சரவணகுமாரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.