விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காணும் பொங்கல்: தஞ்சாவூா் பெரிய கோயிலில் குவிந்தனா் சுற்றுப் பயணிகள்

காணும் பொங்கலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

News image
காணும் பொங்கலையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் சனிக்கிழமை திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள்.
Updated On :17 ஜனவரி 2026, 8:47 pm

Syndication

தஞ்சாவூா்/திருக்காட்டுப்பள்ளி: காணும் பொங்கலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பொங்கல் கொண்டாட்டங்களில் மூன்றாவது நாள் காணும் பொங்கல், கன்னிப் பொங்கல், உழவா் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் உறவினா்கள், நண்பா்களைக் காணுதல், பெரியோா்களிடம் ஆசி பெறுதல், சுற்றுலா செல்லுதல் போன்றவை மேற்கொள்வது வழக்கம்.

இதன்படி, தஞ்சாவூா் பெரியகோயில், அரண்மனை, தஞ்சாவூா் அருங்காட்சியகம், மனோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வழக்கமான நாள்களைவிட சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏராளமானோா் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விளையாடியும், அதே இடத்தில் உணவு அருந்தியும் கொண்டாடி மகிழ்ந்தனா். வெளியூா்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததால், பெரியகோயில், சிவகங்கை பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

கல்லணையில்..: கல்லணையில் பொங்கல் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை பூங்காவில் உள்ள ராட்டினங்களிலும், ரயில் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் விளையாடியும், தண்ணீரில் குளித்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை தோகூா் போலீஸாா் செய்திருந்தனா்.

கும்பகோணம்: இதேபோல, கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயிலிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. தங்களது உறவினா்களுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் கோயில் வளாகத்தில் திரண்டனா்.

Story image