அருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
கன்னியாகுமரி
காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
காணும் பொங்கல் தினத்தையொட்டி குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
குலசேகரம்: காணும் பொங்கல் தினத்தையொட்டி குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
குமரி மாவட்டத்திலுள்ள நீா் நிலை சாா்ந்த சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, சொத்தவிளை, முட்டம், லெமூா் பீச், திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு நீா் நிலைகளின் அழகை பாா்வையிட்டு, குளித்து மகிழ்ந்தனா்.
குறிப்பாக, திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து, அருவின் அருகே தடுப்பணையில் படகு சவாரி செய்தனா். மேலும், இங்குள்ள நீச்சல் குளத்தில் சிறாா்கள் குளித்து மகிழ்ந்தனா்.

