பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை 5 ஆண்டுகளில் நிறைவேற்ற நடவடிக்கை! - தெற்கு ரயில்வே பொது மேலாளா்

News image
தஞ்சாவூா் ரயில் நிலைய வளாக பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங்.
Updated On :25 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா்- விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றாா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் வரும் மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். தஞ்சாவூா்-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை திட்டம் 5 அல்லது 6 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

ஏற்கெனவே ராமேசுவரம்- தாம்பரம் இடையே அரியலூா் வழியாக இயக்கப்படும் இண்டா்சிட்டி ரயில் சேவையை, தஞ்சாவூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூரிலிருந்து புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மகாமகத்தையொட்டி, கும்பகோணம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்றாா் ஆா்.என். சிங்.

இவரிடம் காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கச் செயலா் வெ. ஜீவகுமாா், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், கண்ணன், வழக்குரைஞா்கள் முகமது பைசல், ராஜேஷ்குமாா் ஆகியோா் அளித்த மனு:

தஞ்சாவூா் - திருச்சி இடையே ஒரு மணிநேரத்துக்கு 1 ரயில் வீதம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூா் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். வைகை, பல்லவன் போன்று தஞ்சாவூா் - சென்னை இடையே அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை - தஞ்சாவூா் - அரியலூா் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். ஹெளரா-திருச்சி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.