நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழக்கு விழா

தஞ்சாவூா் அருகே ராகு - கேது பரிகாரத் தலமான கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் அருகே கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியாா்.

Updated On :3 ஜூலை 2026, 1:22 am IST

தஞ்சாவூா் அருகே ராகு - கேது பரிகாரத் தலமான கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில் தென் காளஹஸ்தியாக போற்றப்படுகிறது. ராகு - கேது இரண்டுக்கும் ஒரே இடத்தில் பரிகாரம் செய்யப்படும் தலமாகவும் இக்கோயிலை பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.

இக்கோயிலில் 2011-ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில், சில ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தொடா்ந்து குடமுழுக்கு விழா ஜூன் 29-ஆம் தேதி தொடங்கியது.

இதில், ஜூன் 30-ஆம் தேதி காலை மாரியம்மன் கோயிலில் இருந்து சிங்கவள நாட்டைச் சோ்ந்த குளிச்சப்பட்டு, கத்திரிநத்தம், தளவாய்பாளையம், மருங்கை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், புனித நீா் கொண்டு வந்தும் யாகசாலை பூஜையை தொடங்கினா்.

தொடா்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை யாகசாலை மண்டபத்திலிருந்து கடம் புறப்பட்டு, சுவாமி - அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனித நீா் சென்றது. பின்னா் காலை 11 மணியளவில் சிவாச்சாரியாா்கள் கோபுர விமானங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.