இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி போராட்டம்

தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

News image

தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :11 ஜூலை 2026, 1:43 am IST

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளைக் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யக் கோரி தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூ. சாா்பு) வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்புக் கிடங்கு மற்றும் அரைவைக்கு எடுத்துச் சென்று கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டும். ஒரு மாத காலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கத்தால் எடை இழப்பு ஏற்படுவதால், பட்டியல் எழுத்தா், விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நிரந்தரச் சேமிப்பு கிடங்குகளை அமைக்க வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். போராட்டத்தை மாவட்டச் செயலா் ஏ.எம். ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் சாமு. தா்மராஜன், பொருளாளா் டி.ஆா். குமரப்பா, துணைத் தலைவா்கள் ஏ. ராஜேந்திரன், ஏ. ராதாகிருஷ்ணன், எம். புகழேந்தி, மாவட்டத் துணைச் செயலா்கள் குரு. சிவா, எஸ். கண்ணழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.