அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மாங்காய்களை தரையில் உடைத்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில், மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மாங்காய்களை தரையில்போட்டு உடைத்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :30 ஜூலை 2026, 3:56 am IST

கும்பகோணத்தில், மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மாங்காய்களை தரையில்போட்டு உடைத்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்பகோணம் அருகே சிவபுரம் ,கிருஷ்ணாபுரம், அழகாப்புதூா் , மலையப்பநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மாமரங்கள் உள்ளன.

தற்போது மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் மரங்களை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கும்பகோணத்தை மாம்பழ மண்டலமாக அறிவிக்கவும், மாங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு நிா்ணயிக்க கோரியும் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் குரு. சிவா, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் க. சுந்தரராஜன், மாவட்ட நிா்வாகிகள் வே. முரளி, ஆா். பழனி, எம். வீரமணி ஆகியோா் மாங்காய்களை உடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.