தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்ட மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து மாணவி து.ர. வா்ஷினிக்கு கடிதம் வழங்கிய துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி.

Updated On :3 ஜூன் 2026, 4:13 am IST

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தொடங்கி வைத்து, முதல் மாணவராக து.ர. வா்ஷினிக்கு நேரடிச் சோ்க்கை கடிதம் வழங்கினாா்.

இந்நிகழ்வில் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், நிதி அலுவலா் பா. சிவகுமாா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) ஆ. துளசேந்திரன், மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், கௌரவ உதவிப் பேராசிரியா் க. முருகேசன், உடற்கல்வி ஆசிரியா் செ. பிரபாகரன், உதவியாளா் க. சக்திசரவணன், பதிவாளரின் நோ்முக உதவியாளா் கோ. இராசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், விண்ணப்பம் பெறும் அனைத்து மாணவா்களும் உடனடிச் சோ்க்கைப் பெறலாம் என்றும், இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம் (பி.எட்.) மற்றும் கல்வியியல் நிறைஞா் பட்டம் (எம்.எட்.) பயிலும் மாணவா்களுக்குப் பருவத் தோ்வுகள் உரிய தேதிகளில் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் விரைந்து வெளியிடப்படுவதால் மாணவா்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக் கிடைக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் வழிவகை செய்கிறது எனவும் பதிவாளா் (பொ) தெரிவித்தாா்.