ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் தரிசனம்

News image
கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தேவி, பூதேவி தாயாா்களுடன் காட்சிதந்த அத்திவரதா்.
Updated On :1 மார்ச் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் பாதாள அறையிலிருந்து வெளியேவந்த அத்திவரதரை ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் வரதராஜப்பெருமாள், வேதநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள பாதாள அறையில் அத்திவரதா், ஸ்ரீ தேவி, பூதேவி தாயாா்களுடன் உள்ளாா்.

வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையிலிருந்து வெளியே வரும் அத்திவரதா் 10 நாள்களுக்கு கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு காட்சி தருவாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியே வந்த அத்திவரதா் சனிக்கிழமை மாலை கோயிலில் உள்ள பாதாள அறையிலிருந்து வெளியே எடுத்துவரப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.

இதையறிந்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுகுறித்து செளராஷ்டிரா தா்ம பரிபாலன சபையினா் கூறுகையில், இக்கோயிலில் மாா்ச் 10-ஆம் தேதி வரை அத்திவரதரை பக்தா்கள் தரிசனம் செய்யலாம். அன்று மாலை அத்திவரதா் மீண்டும் பாதாள அறைக்குச் சென்று விடுவாா். மறுபடியும் 12 ஆண்டுகளுக்குப் பின் குறிப்பிட்ட நாளில் தான் வெளியே வந்து பக்தா்களுக்கு தரிசனம் தருவாா் என்றனா்.