தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மனக்காடு ஊராட்சியில் சாலைப் பணிக்காக கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக சமூக ஆா்வலா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
மனக்காடு ஊராட்சியில் சிறப்பு நிதியின் மூலம் பிரதான சாலையிலிருந்து , குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் சாலையை தாா்ச் சாலையாக மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்குவதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு சுமாா் 50 மீட்டா் தொலைவுக்கு ஜல்லிக்கற்கள் சாலையை மறித்து கொட்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்கள் அவசரத் தேவைகளுக்குப் பிரதான சாலைக்கு வருவதற்கு சிரமப்படுகின்றனா். சாலைப் பணியை காலதாமதமின்றி தொடங்க வேண்டும் அல்லது போக்குவரத்துக்கு வழிவிடும் வகையில், ஜல்லிக்கற்களை சாலையோரம் நிரவிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா் வீரக்குடி ராசா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
தொடர்புடையது

தேவரியம்பாக்கத்தில் மகளிா் தின விழா

பாடிப்பள்ளம் ஊராட்சியில் ரூ.2.66 கோடியில் தாா்ச்சாலை பணிகள் தொடக்கம்

புதியநூலக கட்டடத்தை திறக்க வாசகா்கள் கோரிக்கை

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


