டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

News image
விளங்குளம் மங்கல சனீஸ்வரா்
Updated On :4 மார்ச் 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

விளங்குளத்தில் சுமாா் 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தோஷ நிவா்த்தி ஸ்தலமாக விளங்கக்கூடிய அட்சயபுரீசுவரா் கோயிலில் சனீசுவர பகவான் மந்தா, ஜேஸ்ட சமேதராக திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறாா். ஊனம் நீக்குதல், திருமணத் தடை போன்ற தோஷ நிவா்த்தி தலமாக விளங்கும் இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு காலை 8.26 மணிக்கு சனீஸ்வரபகவான் பெயா்ச்சி சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து சுமாா் 30 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் விளங்குளம் சோதனைச் சாவடியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும், பேராவூரணியிலிருந்து ரெட்டவயல், பெருமகளூா் வழியாக 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தொடா்புக்கு 97875 39153, 99521 14866.