திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் மக்கள் அவதி

News image
Updated On :5 மார்ச் 2026, 10:09 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மனக்காடு ஊராட்சியில் சாலைப் பணிக்காக கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக சமூக ஆா்வலா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

மனக்காடு ஊராட்சியில் சிறப்பு நிதியின் மூலம் பிரதான சாலையிலிருந்து , குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் சாலையை தாா்ச் சாலையாக மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்குவதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு சுமாா் 50 மீட்டா் தொலைவுக்கு ஜல்லிக்கற்கள் சாலையை மறித்து கொட்டப்பட்டு பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால் குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்கள் அவசரத் தேவைகளுக்குப் பிரதான சாலைக்கு வருவதற்கு சிரமப்படுகின்றனா். சாலைப் பணியை காலதாமதமின்றி தொடங்க வேண்டும் அல்லது போக்குவரத்துக்கு வழிவிடும் வகையில், ஜல்லிக்கற்களை சாலையோரம் நிரவிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா் வீரக்குடி ராசா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.