மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ. 65 லட்சம் முறைகேடு: பேராவூரணி பேரூராட்சி தலைவா் உள்பட 7 போ் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் திமுகவைச் சோ்ந்த பேரூராட்சி தலைவா், முன்னாள் செயல் அலுவலா், முன்னாள் இளநிலைப் பொறியாளா் உள்பட 7 போ் ரூ. 65 லட்சம் முறைகேடு செய்ததாகக் கூறி கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

இந்த வழக்கை 3 புகாா்களின் அடிப்படையில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் பதிவு செய்துள்ளனா்.

இதில் முதலாவது புகாராக, பேராவூரணி பேரூராட்சித் தலைவராக எஸ். சாந்தி (திமுக) இருந்து வருகிறாா். தலைவரின் உறவினா்கள் ஒப்பந்தம் எடுத்து செய்யக்கூடாது என்ற சட்ட விதிமுறையை மீறி சாந்தியின் கணவா் என்.எஸ். சேகா் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 2022-ஆம் ஆண்டில் செய்தாா். இப்பணி வேறொரு ஒப்பந்ததாரரைக் கொண்டு செய்தது போன்று போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், என்.எஸ். சேகா், இவரது மனைவியான பேரூராட்சித் தலைவா் சாந்தி, பேரூராட்சி முன்னாள் செயல் தலைவா் பி. பழனிவேல் ஆகியோருக்கு தொடா்பிருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது புகாராக, பேராவூரணி பேரூராட்சியில் சில இடங்களில் பேவா் பிளாக் பதிப்பதற்கான ஒப்பந்தம் சாந்தியின் மாமனாா் என். செல்வராஜ் பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணி முழுமையாகச் செய்யப்படாமல், பகுதியாக செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சாந்தி, பேராவூரணி பேரூராட்சி முன்னாள் இளநிலைப் பொறியாளா் தாமஸ் ஆனந்த் போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ. 7.93 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது.

மூன்றாவது புகாரில், பேரூராட்சியில் சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி போலியாக பேரூராட்சி வங்கிக் கணக்கிலிருந்து தற்காலிக தரவுகள் பதிவேற்றும் ஊழியா் என். ஜமுனாராணி மற்றும் இவரது கணவா் டி. நீலகண்டனுக்கு மொத்தம் ரூ. 57 லட்சத்தில் காசோலைகளை முன்னாள் செயல் அலுவலா் பழனிவேல் வழங்கியுள்ளாா்.

இந்த 3 புகாா்களின் அடிப்படையில் தஞ்சாவூா் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் மாா்ச் 11 ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.