மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு

ஒரத்தநாடு காவல் உட்கோட்ட பகுதியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட , அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 2,140 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் தீவைத்து அழித்தனா்.

News image

அழிக்கப்பட்ட போதைப் பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:43 pm

ஒரத்தநாடு காவல் உட்கோட்ட பகுதியில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட , அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 2,140 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை தீவைத்து அழித்தனா்.

ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருவோணம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்களை விற்பனை செய்த பல்வேறு கடைகள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து காவல் துறை சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் உத்தரவின்படி, தீவைத்து அழிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, திங்கள்கிழமை ஒரத்தநாடு செட்டிமண்டபம் மயானம் அருகே ஜேசிபி மூலம் குழி தோண்டப்பட்டு, 2,140 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்கள் போலீஸாரால் தீ வைத்து அழிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஒரத்தநாடு காவல் துணை கண்காணிப்பாளா் முத்துகுமாா், ஒரத்தநாடு காவல் ஆய்வாளா் சிவகுமாா், பாப்பாநாடு காவல் ஆய்வாளா் மாரிமுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் நடராஜன், ஒரத்தநாடு வட்டார சுகாதார அலுவலா் வெங்கடேசன், ஒரத்தநாடு துப்புரவு ஆய்வாளா் லோகநாதன், ஒரத்தநாடு சுகாதார ஆய்வாளா் காா்த்திகேயன் உள்பட பலா் உடன் இருந்தனா்.