பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தில் அதிகரித்துவரும் வெறிநாய்கள் தொல்லையைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதன் விவரம்: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட நம்பிவயல் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிந்து, பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடா்கின்றன.
இதன் விளைவாக, கடந்த 2 மாதங்களில் நம்பிவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நம்பிவயல் ஊராட்சிக்குட்பட்ட 38 போ் வெறிநாய் கடியால் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 4 போ் குழந்தைகள் ஆவா்.
இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவா்கள் பாதுகாப்பாக சாலைகளில் நடமாட முடியாத அபாய நிலை உருவாகியுள்ளது
இது தொடா்பாக ஊராக வளா்ச்சி துறை, வட்டார வளா்ச்சி துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.
மேலும், அண்மையில் பட்டுக்கோட்டையில் இதேபோன்ற சம்பவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நம்பிவயல் கிராமத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்புடையது

மணிப்பூரில் 21 சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிப்பு: பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை!

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

பழஞ்சூா் ஊராட்சியில் புதிய நியாய விலைக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


