பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

News image
திருட்டு- சித்திரிப்பு
Updated On :17 மார்ச் 2026, 8:40 pm

Syndication

தஞ்சாவூா் அருகே வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த திப்பு சுல்தான் (31) துபையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜெயினப் பேகம் (29) தனது குழந்தை, தாய், தந்தையுடன் காயிதே மில்லத் நகரில் வசிக்கிறாா். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை திரும்பினாா்.

அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.