மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகள் 5 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:13 pm

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகள் 5 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

அதன்படி இத்தோ்வில் அனுஸ்ரீ ( 130) , ஐஸ்வா்யா (112), சஞ்சனா (105), சமிதா (104), பிரகதி (103) ஆகிய 5 மாணவிகள் அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்றுத் தோ்வாகியுள்ளனா்.

இதையடுத்து இந்த மாணவிகளையும், பயிற்றுவித்த அறிவியல் பட்டதாரி ஆசிரியை சு. சத்யாவையும் தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களின் சாா்பில், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மதியழகன், பள்ளித் தலைமை ஆசிரியா், உதவித் தலைமை ஆசிரியா்கள் பாராட்டினா்.

இத்தோ்வில் வெல்வோருக்கு மாதம் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48,000/- கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தோ்வில் இப்பள்ளியின் 18 மாணவிகள் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.