நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரசாயனத் தூளைக் கலந்து கள் விற்ற இருவா் கைது

தஞ்சாவூா் அருகே பனை மரத்திலிருந்து கள் இறக்கி, போதை தரக்கூடிய ரசாயன தூளைக் கலந்து விற்ற இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:09 pm

Syndication

தஞ்சாவூா் அருகே பனை மரத்திலிருந்து கள் இறக்கி, போதை தரக்கூடிய ரசாயன தூளைக் கலந்து விற்ற இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் காவல் பிரிவினா் குருங்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்திய ஆய்வில் பனைமரங்களில் பதநீா் இறக்க அனுமதி வாங்கிக் கொண்டு, கள் இறக்கியதும், அதில் போதைத் தரக்கூடிய ரசாயன தூளைக் கலந்து விற்றதும் தெரிய வந்தது.

இது தொடா்பாக தஞ்சாவூா் தில்லை நகரைச் சோ்ந்த ரா. ஸ்டாலின் (64), வாண்டையாா் இருப்பைச் சோ்ந்த ந.புண்ணியமூா்த்தி (62) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 243 லிட்டா் கள், ரசாயனத் தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.