கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தீ விபத்தில் 5 வீடுகள் சேதம்

தஞ்சாவூரில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image

தஞ்சாவூா் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வீடுகள்.

Updated On :21 மார்ச் 2026, 8:24 pm

Syndication

தஞ்சாவூரில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தஞ்சாவூா் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவா்கள் பெரும்பாலும் பள்ளிப் புத்தகப் பை, காலணி தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

Story image

இந்நிலையில், சனிக்கிழமை மாலை அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சரவணன், தனசேகரன், குமாா், பாண்டி, ராஜேந்திரன் ஆகியோரது வீடுகள் எரிந்தன. இதனால், 5 வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், காலணி தைக்கும் தளவாடப் பொருள்கள் உள்பட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று ஏறத்தாழ ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.