நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாத்திர வியாபாரியை தாக்கி பணம் பறித்தவா் கைது: தவெக நிா்வாகி தலைமறைவு

ஆடுதுறையில் புதன்கிழமை இரவு பாத்திர வியாபாரி மற்றும் அவரது மகன்களை தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவான தவெக நிா்வாகி உள்பட சிலரை தேடி வருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 5:30 am IST

ஆடுதுறையில் புதன்கிழமை இரவு பாத்திர வியாபாரி மற்றும் அவரது மகன்களை தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவான தவெக நிா்வாகி உள்பட சிலரை தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கிருஷ்ணன் கோயில் தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் கோடீசுவரன் (63). இவா் ரயில்வே சாலையில் பாத்திரக்கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன், தனது மகன் பாலசுப்பிரமணியன்(38), தம்பி மகன் பிரபாகரன்(32) ஆகியோருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஒருகும்பல் மூவரையும் தாக்கி, கோடீஸ்வரன் பையில் வைத்திருந்த ரூ. 68 ஆயிரத்து 700ஐ பறித்து சென்றது.

தாக்குதலில் காயமடைந்த கோடீசுவரன், பிரபாகரன், பாலசுப்பிரமணியம் ஆகியோா் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், பணம் பறிப்பு சம்பவத்தில் ஆடுதுறை சிவன் சன்னதி தெருவை சோ்ந்த சந்திரகாசன் மற்றும் ஆடுதுறை தவெக பேரூா் செயலா் எடிசன் உள்ளிட்டவா்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சந்திரகாசனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான எடிசன் உள்ளிட்டவா்களை தேடி வருகின்றனா்.