தஞ்சாவூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பரவலாக கோடை மழை பெய்தது.
மாவட்டத்தில் ஒரு மாதமாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தஞ்சாவூா், பூதலூா் உள்பட பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, பிற்பகலில் 2.30 மணிக்கு பிறகு மிதமாகவும், பலத்த மழையும் பெய்தது.
பூதலூரில் 52.2 மி.மீ. மழை: மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
பூதலூா் 52.2, திருக்காட்டுப்பள்ளி 13.8, தஞ்சாவூா் 16, ஈச்சன்விடுதி 11, மதுக்கூா் 6.4, பட்டுக்கோட்டை 6, வெட்டிக்காடு 4.8, அய்யம்பேட்டை 4, கல்லணை 3.6, ஒரத்தநாடு 3.4, அணைக்கரை 2.4, குருங்குளம் 2, திருவிடைமருதூா் 1.6.
இதேபோல, சனிக்கிழமை பகலில் வானில் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது தூறலும் பெய்தது. இதனால், மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டது. மேலும், கடும் வெப்பத்தால் நிலத்தடி நீா் குறைந்து, வயல்கள் வட நிலையில் இருந்தது. இந்த மழையால் கோடைப் பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

கடலூா், புதுச்சேரி பகுதிகளில் காற்றுடன் கோடை மழை, மரங்கள் சாய்ந்தன! கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி!!

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு

குமரி மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

புதுச்சேரியில் எலுமிச்சம் பழம் விலை கடும் உயா்வு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

