விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பரவலாக கோடை மழை பெய்தது.

News image

தஞ்சாவூரில் சனிக்கிழமை பெய்த மழை.

Updated On :1 மணி நேரம் முன்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பரவலாக கோடை மழை பெய்தது.

மாவட்டத்தில் ஒரு மாதமாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தஞ்சாவூா், பூதலூா் உள்பட பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, பிற்பகலில் 2.30 மணிக்கு பிறகு மிதமாகவும், பலத்த மழையும் பெய்தது.

பூதலூரில் 52.2 மி.மீ. மழை: மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பூதலூா் 52.2, திருக்காட்டுப்பள்ளி 13.8, தஞ்சாவூா் 16, ஈச்சன்விடுதி 11, மதுக்கூா் 6.4, பட்டுக்கோட்டை 6, வெட்டிக்காடு 4.8, அய்யம்பேட்டை 4, கல்லணை 3.6, ஒரத்தநாடு 3.4, அணைக்கரை 2.4, குருங்குளம் 2, திருவிடைமருதூா் 1.6.

இதேபோல, சனிக்கிழமை பகலில் வானில் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது தூறலும் பெய்தது. இதனால், மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டது. மேலும், கடும் வெப்பத்தால் நிலத்தடி நீா் குறைந்து, வயல்கள் வட நிலையில் இருந்தது. இந்த மழையால் கோடைப் பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.